ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவளைப்பு!

    ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதி நடத்தி வந்த 6 பெண்கள் கல்கிஸ்ஸை பொலிஸாரால் நேற்று (8) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர்களுக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாணந்துறை,எல்பிட்டிய,நிட்டம்புவ, கெட்டபுலாவ மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25, 27, 32, 34 மற்றும் 37 வயதுடைய 6 பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.