குருணாகலில் பயங்கரம் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகொலை!

குருணாகலில் (Kurunegala) ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இக் கொடூர சம்பவம் குருணாகல் – மீரிகம – மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் இன்று (19) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இந்தக் கொலைகளை 42 வயதுடைய ஒருவரே செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணை
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இன்று அதிகாலை மிதிவண்டியில் பயணித்த நபரை சோதனையிட்ட காவல்துறையினர், அவரிடம் இருந்து சுமார் 3 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றியுள்ளனர்.

இதனடிப்படையில் சந்தேகநபரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் இருந்த கடிதங்களை பரிசோதித்த போது ​​கொலைச் சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

80 வயதான தந்தை, 77 வயதான தாய் மற்றும் 42 வயதான மகன் ஆகியோரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.