நாடளாவிய ரீதியில் முடங்கவுள்ள அரச வைத்தியசாலைகள்!

நாட்டிலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் 22ஆம் திகதிக்கு பின்னர் ஒன்றிணைந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காததால் கடுமையான வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் அதன் இணை அழைப்பாளர் சானக தர்மவிக்ரம (Chanaka Dharmawickrama) குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஊவா மாகாணத்தில் 20ஆம் திகதியும், மேல் மாகாணத்தில் 21ஆம் திகதியும் மாகாண மட்டத்தில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வெளியிடப்பட்ட சுற்றறிக்கை
இந்த நிலையிலே 22 ஆம் திகதிக்கு பிறகு நாடாளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு முன்னடுக்கப்படவுள்ளது.

மேலும் ஏப்ரல் 03ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக சுகாதார அமைச்சும் நிதி அமைச்சும் தொழில் நடவடிக்கையை ஆரம்பித்து அந்த ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தியதில் 15க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் நீக்கப்பட்டு சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.