புதிய தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ள பொலிஸ் தலைமையகம்

“1997” என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல்களை வழங்க முடியுமென பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதைகள், போதைப்பொருள் பாவனை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தகவல்கள் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் மாத்திரமே குறித்த தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.