வேலைக்கு செல்லாத மகனை கிண்டல் செய்ததால் நிகழ்ந்த விபரீதம்!

வேலைக்கு செல்லாத மகனை தந்தை கிண்டல் செய்துள்ளார் இதனால் விபரீதம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலம் மும்பையின் அந்தேரி புறநகர் பகுதியை சேர்ந்த 53 வயது நபர் இந்தி நடிகருக்கு டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு 24 வயதில் மகன் உள்ளார்.

இதனிடையே, தனது மகன் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி கொண்டிருந்ததை தந்தை கண்டித்துள்ளார். எதாவது வேலைக்கு செல்லும்படியும் மகனிடம் கிண்டலாக கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக இவ்வாறு கூறியுள்ளார். இந்நிலையில், வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வரும் தன்னை தந்தை தொடர்ந்து கிண்டல் அடித்து வந்ததால் ஆத்திரமடைந்த மகன் கடந்த புதன்கிழமை இரும்பு கம்பியால் தந்தையை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் தலையில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். கடந்த 3 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த டிரைவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தந்தையை அடித்துக்கொன்ற மகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.