மசகு எண்ணெய்யின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

மசகு எண்ணெய் விலையில் திருத்தத்தை ஏற்படுத்துவது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் அடுத்த வாரம் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நேற்று வியாழக்கிழமை (06) இதனை தெரிவித்துள்ளார்.

அத்தோடு கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளமை மற்றும் வட்டி விகிதங்கள் குறைவினால் மசகு எண்ணெயின் விலையை குறைக்க முடியும் என வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.