காட்டில் சடலமாக மீட்க்கப்பட்ட தாய் மற்றும் குழந்தை

  அங்குருவத்தோட்ட, ஊருதொடாவ பிரதேசத்தில் காணாமல்போன இளம் தாயும் அவரது பெண் குழந்தையும் சடலங்களாக மீடகப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருவரும் அங்குருவாதொட்ட ரத்மல்கொட காட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நடந்தது என்ன? 

சம்பவத்தில் 24 வயதான வாசனா குமாரி மற்றும் அவரது 11 மாத பெண் குழந்தையான தஷ்மி திலன்யா இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளனர்.

கணவர் வேலைக்குச் சென்ற நிலையிலேயே அவர்கள் இருவரும் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

காணாமல்போன பெண்ணின் கணவரின் மைத்துனரான முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர், சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பெண்னின் வீட்டின் சமையலறைப் பகுதியில் உள்ள குளிர்சாதனப் பெட்டியின் கதவில் சில கறைகளும், தரையில் இரத்தக் கறைகளும் காணப்பட்டதாக விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை , காணாமல்போன பெண்ணின் கணவன் தனது மைத்துனர் வீட்டிற்கு வந்து சென்ற நிலையில் அவர்மீது முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும், கணவர் இல்லாத நேரத்தில் மைத்துனர் வந்து செல்வது தொல்லையாக இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் மனைவி இரண்டு தடவைகள் தன்னிடம் கூறியதாகவும் அவரது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் தற்போது பொலிஸ் காவலில் உள்ள நபர் மூன்று பெண்களிடம் தகாத வார்த்தை பிரயோகம் செய்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.