வவுனியா தும்பு தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!

வவுனியாவில் உள்ள ஈரப்பெரியகுளம் தும்புத் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட் தீ விபத்தில் தொழிற்சாலையின் ஒரு பகுதி தீயில் எரிந்து சேதமாகின.

குறித்த தீ விபத்து நேற்றைய தினம் (21-07-2023) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் திடீரென தீ பரம்பல் ஏற்பட்டதை அங்கு கடமையில் இருத்தவர்கள் அவதானித்துள்ளனர்.

பின்னர் உடனடியாக பொலிஸாருக்கும், வவுனியா மாநகரசபை தீயணைப்பு பிரிவினருக்கும் தகவல் வழங்கினர்.  

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் இராணுவத்தினரின் துணையுடன் தீயை கட்டுப்படுத்த கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

இருப்பினும், தும்புத் தொழிற்சாலையின் இரு பகுதியில் தீப் பரம்பல் ஏற்பட்டுள்ளது. கட்டுப்படுத்த கடும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தீ விபத்துக்கான காரணம் குறித்து ஈரப்பெரியகுளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.