கொழும்பு காலி முகத்திடலில் சிறுமியை கடத்தும் முயற்சி முறியடிப்பு!

கொழும்பு காலி முகத்திடலுக்கு தனது தாய் மற்றும் தந்தையுடன் வந்த ஏழு வயது சிறுமியை கடத்திச் செல்ல முயற்சித்ததாக கூறப்படும் நபரை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தங்கள் மகளை ஒருவர் கடத்திச் செல்வதாக கூறி  சிறுமியின் பெற்றோர் உதவி கேட்டு அலறியபோது அங்கிருந்த மக்களால் சந்தேக நபர் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.  

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உடப்புஸல்லாவை பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் ஆவார்.