வானிலை தொடர்பான அறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (06) சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்  எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் விசேடமாக மழை இல்லாத வானிலையே காணப்படக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Previous articleஅடையாளம் காணப்படாத சடலம் ஒன்று மீட்பு!
Next articleதிருடிய நகைகளை விழுங்கிய நபர் வைத்தியசாலையில் அனுமதி!