மட்டக்களப்பில் கணவன் 7 தடவைகளுக்கு மேல் கட்டாய உறவு!! மனைவி விவாகரத்து விண்ணப்பம்!!

மட்டக்களப்பில் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் கிராமமொன்றை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஆசிரியரான தனது கணவர் தினமும் 7 முறை உடலுறவு கொள்வதாக குறிப்பிட்டு விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்த வழக்கு கடந்த வாரத்தில் முதல் முறையாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது.

25 வயதான பெண் திருமணமான 5 ஆவது மாதத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

பாடசாலையால் வீடு வந்ததில் இருந்து மறுநாள் காலையில் பாடசாலை செல்வதற்கு இடையில் தினமும் சராசரியாக 7 முறை உடலுறவு கொள்வதாக குறித்த மனைவி குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த கொடுமைக்கு தான் எதிர்ப்பு தெரிவித்தபோது தாக்கி பலவந்தமாக உடலுறவு கொள்வதாகவும் கணவனின் கொடுமையிலிருந்து தப்பித்து தற்போது பெற்றோருடன் வசித்து வருவதாகவும் குறிப்பிட்டு விவாகரத்து கோரியுள்ளார்.