ரணிலுக்கு ஆதரவு வழங்கும் வடிவேல் சுரேஷ்

 ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்க நான் தயார் என வடிவேல் சுரேஷ் அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறமையானவர் என்றும் மலையகப் பெருந்தோட்ட மக்களுக்குக் காணி உரிமை வழங்குவதற்கு அவர் நடவடிக்கை எடுத்தால் ஒட்டுமொத்த மலையக மக்களுடன் அவருக்கு ஆதரவு வழங்கத் தயார் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

அதோடு எனக்கு கட்சி முக்கியமில்லை. எனது மக்களுக்கு சேவை செய்யக்கூடியவர்களே முக்கியம் என்றும் வடிவேல் சுரேஷ் மேலும் கூறினார்.