அவுஸ்ரேலியாவில் இலங்கையர்களால் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம்

அவுஸ்திரேலியாவில் இலங்கையரால் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் இலக்கை அடைந்துள்ளது.

அகதிகள் விசாவில் உள்ளவர்களுக்கும் அரசியல் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கும் நிரந்தரத் தீர்வைக் கோரி இந்த நடைப்பயணம் ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி நீல் பாரா என்ற இலங்கையர் விக்டோரியாவில் இருந்து நடைபயணத்தை ஆரம்பித்தார்.

1,000 கிலோ மீட்டர் நடைப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை சிட்னிக்கு சென்றடைந்துள்ளார்.

நடை பயணம்

12,500க்கும் மேற்பட்ட அரசியல் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி 19,000 கையெழுத்துகளுடன் கூடிய மனு ஒன்றையும் நீல் பாரா கொண்டுவந்து, அதனை சிட்னியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைக்கவுள்ளார்.