நல்லூர் ஆலயத்தில் கோலாகலமாக இடம்பெற்ற மாம்பழ திருவிழா

  யாழ்ப்பாணம் , வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவp2பெருவிழா இடம்பெற்று வரு ம் நிலையில் ,  திருவிழாவின், 22ஆம் நாளான இன்று மாம்பழ திருவிழா (தெண்டாயுதபாணி உற்சவம்) சிறப்பாக நடைபெற்றது.

இன்று (11) காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து பிள்ளையாரும் முருகபெருமானும் வெளிவீதியுலா வந்தனர்.

இந்த மாம்பழ திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டனர். இதன்போது அலங்கார கந்தனாம்  நல்லூர்   முருக பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளியிருந்தார்.