பயணப்பொதியில் இருந்து மீட்க்கப்பட்ட சடலம்!

பயணப் பொதியொன்றில் இருந்து சடலமொன்றை பொலிஸார் வெள்ளிக்கிழமை (15) மீட்டுள்ளனர்.

சீதுவை தண்டுகம் ஓயாவிற்கு அருகில் பயணப் பொதியொன்றில் இருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் ஆண் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.