மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் தொடர்ச்சியாக நிலவிவரும் மழையுடனான வானிலையினால் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு  அபாய எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, கண்டி, கேகாலை, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை  மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு  மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.