நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜேர்மனியில் நடைபெற்ற “பேர்லின் சர்வதேச” மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாடு திரும்பியுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் குழுவினர் இன்று (01) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை​ வந்தடைந்ததாக “அத தெரண” விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டார்.

கட்டார் விமான சேவைக்கு சொந்தமான  QR-660 ரக விமானம் மூலம் ஜனாதிபதியும் குழுவினரும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.