ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட சில தரப்பினரால் இன்று (02) கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகம், செரமிக் சந்தி, NSA சுற்றுவட்டம் வரையும், அங்கிருந்து பாலதக்ச மாவத்தைக்குள்ளும் ஆர்ப்பாட்டகார்கள் செல்வதை தடுத்து கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுத்த கோரிக்கைக்கு அமைய கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சமூக ஊடகங்கள் மற்றும் பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மதுஷன் சந்திரஜித், கல்வெவ சிறிதம்ம தேரர், துமிந்த நாகமுவ, ஜோசப் ஸ்டாலின், தம்மிக்க முனசிங்க, தென்னே ஞானானந்த தேரர் உள்ளிட்ட 9 ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.