இலங்கை வந்த சீன முதலீடாளர்கள்

கொழும்பு துறைமுக நகர முதலீட்டு திட்டத்தில் முதல் முதலீடாக சீனாவை சேர்ந்த நான்கு முதலீட்டாளர்கள் நேற்று (02) இரவு இலங்கை வந்தடைந்தனர்.

சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள ஒரு அரை அரச நிறுவனமான C.Z.K. Huarui Cultural and Art Company ஐ பிரதிநிதித்துவப்படுத்தி, அந்த நிறுவனத்தின் பொது மேலாளருடன் மேலும் மூன்று பேர் நாட்டுக்கு வந்துள்ளனர்.

இந்த முதலீட்டாளர்கள் , 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்து இந்த துறைமுக நகர திட்டத்தில் இரத்தினக்கல் அருங்காட்சியகம், இரத்தினக்கல் பரிசோதனை ஆய்வு கூடம் மற்றும் ஏல மையம் ஆகியவற்றை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த முதலீட்டாளர்கள் குழு இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் 150 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் மின்சார வாகனங்களை ஒன்றிணைக்கும் தொழிற்சாலையையும் ஆரம்பிக்கவுள்ளனர்.