9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கண்டி, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டம்

கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க பிரதேசத்திற்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை முதற்தடவையாக விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் சீதாவக்க பிரதேசத்திற்கு விடுக்கப்பட்ட முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டம்

கம்பஹா மாவட்டத்தின் மீரிகம பிரதேசத்திற்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டம்

களுத்துறை மாவட்டத்தில் தொடங்கொட மற்றும் பாலிந்தநுவர பிரதேசங்களுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அகலவத்தை மற்றும் புளத்சிங்கள பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, வலல்லாவிட்ட மற்றும் மத்துகம பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை இரண்டாம் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

காலி மாவட்டம்

இதேவேளை, காலி மாவட்டத்தின் நாகொட, காலி கடவத்சதர, தவலம, அம்பலங்கொட, நியாகம, அக்மீமன, இமதுவ, போபே போத்தல, யக்கலமுல்ல, பத்தேகம ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், காலி மாவட்டத்தின் எல்பிட்டிய பிரதேசத்திற்கு முன்னர் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை இரண்டாம் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேசத்திற்கு விடுக்கப்பட்ட இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டம்

மாத்தறை மாவட்டத்தில் வெலிபிட்டிய, முலட்டியன, திஹகொட, மாலிம்பட, மாத்தறை, கம்புருபிட்டிய, பஸ்கொட, கிரிந்த புஹுல்வெல்ல, ஹக்மன மற்றும் அதுரலிய ஆகிய பகுதிகளுக்கு மீண்டும் நிலை 1 மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொடபொல பிரதேசத்திற்கு விடுக்கப்பட்ட முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ மற்றும் பிடபத்தர பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்டம்

ஹம்பாந்தோட்டை வலஸ்முல்ல பிரதேசத்திற்கு விடுக்கப்பட்ட முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டம்

கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளே பிரதேசத்திற்கு மீண்டும் முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டம்

இரத்தினபுரி மாவட்டத்தின் வெலிகேபொல பிரதேசத்திற்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொலன்ன, கொடகவெல, இம்புல்பே, பெல்மடுல்ல, அயகம, நிவித்திகல, கிரியெல்ல, ஓபநாயக்க மற்றும் கஹவத்த ஆகிய பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, எஹெலியகொட, கலவான, எலபாத மற்றும் குருவிட்ட ஆகிய பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டம்

கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட, தெரணியகல, யட்டியந்தோட்டை, கேகாலை மற்றும் ருவன்வெல்ல ஆகிய பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.