கனமழை தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு!

  கனமழை தொடர்பில் எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

இந்த அறிவித்தல் இன்று (07) பிற்பகல் 2.00 மணி முதல் நாளை (08) பிற்பகல் 2.00 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

100 மி.மீற்றருக்கும் அதிகமான கன மழை 

நாட்டை சூழவுள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.