இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்  பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,

கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேல் மற்றும் தென் மாகாணங்களின்  கரையோரப் பிராந்தியங்களில் காலை வேளையில் சிறிதளவு  மழை பெய்யக்கூடும். 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பாடு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின்  சில இடங்களில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 கிலோமீற்றர் வேகத்தில் தென் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும். 

புத்தளம் தொடக்கம்  மன்னார் ஊடாக காங்கேசன்துறை  வரையான அத்துடன் கடல்  பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.  இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு  கொந்தளிப்பாகக் காணப்படும். 

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் எனத் தெரிவித்தார்.