மது போதையில் ரயிலில் பயனித்தவரால் மோதல்!

யாழ் – கொழும்பு ரயிலில் நேற்றிரவு (11) மது போதையில் பயணித்தவரால் ஏற்பட்ட மோதல் காரணமாக பயணிகள் பெரும் அசெளகரியங்களிற்கு உள்ளாகியுள்ளனர்.

அச்சத்தில் இருந்த மக்கள் புகையித பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவித்துள்ளனர்.

இதனை அடுத்து அவர்களின் தலையீட்டின் பின்னர் மோதலில் ஈடுபட்டவர் கிளிநொச்சி புகையிரதத்தில் இறங்கி தப்பி ஓடியுள்ளார்.

அவர் அருகில் உள்ள வீட்டுக்குள் புகுந்த போது அப்பகுதி இளைஞர்களால் மடக்கி பிடித்து நைய புடைக்கப்பட்டுள்ளார்.

இதனால் நீண்ட நேர தாமதத்தின் பின்னர் பயணிக்கும் நிலை மக்களிற்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.