யாழில் திடீரென தரையிறங்கிய கிணறு!

யாழ்ப்பாண பகுதியில் உள்ள கிணறு ஒன்று இடிந்து கீழ் இறங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொலிகண்டி வீரபத்திரர் கோவில் பகுதியில் உள்ள கிணறு ஒன்றே இவ்வாறு இடிந்து கீழ் இறங்கியுள்ளது.

பொலிகண்டி பகுதியில் உள்ள கிணற்றின் சுற்று சுவர் இன்றைய தினம் (03-11-2023) காலை இடிந்து கீழ் இறங்கியுள்ளது.

இதேவேளை, கிணற்றுக்கு அருகில் உள்ள நிலப்பரப்பும் வெடிப்பு ஏற்பட்டு காணப்படுகின்றது.

மேலும், கிணறு இடிந்ததற்கான காரணங்கள் எதுவும் தெரியவராத நிலையிலும் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக கிணறு இடிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.