வைத்தியசாலையில் மோசமான செயலில் ஈடுபட்ட ஊழியர்

காலி – உடுகம பிரதேசத்தில் வைத்தியசாலை ஒன்றின் குளியலறையில் ஆடை மாற்றிக்கொண்டிருக்கும் தாதியை கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்தவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

 சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை பணியாளர்  ஒருவரே இவ்வாறு  உடுகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டடவர் வைத்தியசாலையில் பணிபுரியும் பணியாளரான காலி – வலஹந்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவராவார்.

இந்நிலையில்  பாலியல் துஷ்பிரயோக குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர் உடுகம நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.