A/L வெட்டுப்புள்ளிகள் இன்று வௌியாகும்

கடந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான வெட்டுப்புள்ளிகள் இன்று (01) வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றை ஆற்றிய போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

 பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 6 வாரங்கள் என்ற குறுகிய காலப்பகுதியில் தமது கற்கை பீடங்கள் தொடர்பான தகவல்களை அதிகாரிகள் வெளியிட நடவடிக்கை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் ஊடாக இந்த தகவல்கள் வெளியிடப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.