இலங்கையில் ஒல்லாந்தர் கால பொருட்கள் கண்டுபிடிப்பு!

  மாத்தறை கோட்டையில் மின்சார சபையினரால் தோண்டப்பட்ட குழி ஒன்றில் காணப்பட்ட எலும்புகள் மற்றும் பொருட்கள் ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்தவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளில் அவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மனித எலும்புகள், பீங்கான் பொருட்கள், புகை பிடிக்கும் இயந்திரம் 

அந்த இடத்தில் மின் கம்பம் நடுவதற்காக குழி தோண்டியபோது, மனித எலும்புகள், பீங்கான் பொருட்கள், புகை பிடிக்கும் இயந்திரம் மற்றும் சில மண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டன.

அது தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவற்றை மாத்தறை தொல்பொருள் திணைக்கள அருங்காட்சியகத்தில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.