முட்டை விலை தொடர்பில் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை!

நாட்டின் பல பாகங்களிலும் முட்டையின் விலை 50 முதல் 60 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில்,

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்யும் நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதுடன் முதற் கட்டமாக எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் மேலும் 18 மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறானதொரு நிலையில் தற்போது நுகர்வோரின் தேவை குறைவடைந்துள்ள நிலையில் எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை மேலும் குறையும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் முட்டை இறக்குமதியினை தொடர்ந்து சில பகுதிகளில் முட்டையின் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.