அனைத்து பாடசலைகளுக்கும் நாளை விடுமுறை!

அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணைக்கான முதற்கட்டப் பணிகள் நாளையுடன் (22) முடிவடைவதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் பெப்ரவரி 1 ஆம் திகதி மீண்டும் தொடங்க உள்ளதாகவும் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய வருடத்திற்கான முதல் தவணை பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.