தந்தை மகன் மீது கொடூர தாக்குதல்!

தனமல்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சர்வோத சந்தியில் ஆண் ஒருவரும் அவரது மகனும் கூரிய ஆயுதம் மற்றும் இரும்பு கம்பியினால் தாக்கப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் நேற்று (26) இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காயமடைந்த இருவரும் தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக தந்தை ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

15 வயது சிறுவனும் 56 வயதுடைய அவரது தந்தையுமே தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.

இரண்டு நபர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்றைய சந்தேக நபரை தேடி தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.