எரிபொருள் விலையில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்!

இம்மாத இறுதியில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தமே இதற்குக் காரணம் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும் எரிபொருளில் புதிதாக 18% வற் வரி சேர்க்கப்பட உள்ளதாகவும், ஆனால் எரிபொருளில் இருந்து 8% துறைமுக கட்டணங்கள் நீக்கப்பட்டதால், எரிபொருள் விலை 10% மட்டுமே அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த விலை திருத்தங்கள் ஜனவரி 1, 2024 முதல் நடைப்படுத்தப்படும் எனவும் கூறப்படுகின்றது.