போதகர் ஜெரோம் மீண்டும் விளக்கமறியலில்

புதுக்கடை 2ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் அவரை இன்றைய தினம் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதங்களை அவமதிக்கும் வகையில் கருத்து வௌியிட்ட குற்றச்சாட்டு தொடர்பில் அண்மையில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான வேளை, போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கடை 2ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் அவரை இன்றைய தினம் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதங்களை அவமதிக்கும் வகையில் கருத்து வௌியிட்ட குற்றச்சாட்டு தொடர்பில் அண்மையில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான வேளை, போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.