யாழில் கரையொதுங்கிய தெப்பத்தால் குழப்பத்தில் மக்கள்!

  யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் தெப்பம் ஒன்று இன்று (புதன்கிழமை) கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தெப்பம் பௌத்த கொடிகளுடன் கரையொதுங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் அத் தெப்பம் மிகவும் அலங்கரிக்கபப்ட்ட நிலையில் கரையுதுங்கியுள்ளது.

இது மியன்மார் நாட்டில் திருவிழா நிகழ்வுகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைப்படும் இரதம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் அனாமதேய அந்த தெப்பம் எங்கு வந்தது என்பது தொடர்பில் தரியவராத நிலையில் கைக்கு வந்த தெப்பத்தால் மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.