பெண்ணுக்கு உதவிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

  பூகொடை பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் ஒருவருக்கு உதவியதாக கூறப்படும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொஸ்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் ராஜகிரிய பொலிஸ் விசேட அதிரடிப்படையில் கடையாற்றும் 40 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தராவார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் ஒருவருக்கு உதவி செய்து வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.