கொழும்பில் போதைப்பொருளுடன் கைதான பொலிஸ் உத்தியோகத்தர்!

கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிஹிஜய செவன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 27 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கைதாகியுள்ளார்.

நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தல்

மோதரை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வைத்து கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சந்தேக நபர் மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளதாக கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.