யாழ் ஆலயம் அருகில் வீசப்பட்ட மாட்டிறைச்சி கழிவுகள்!

யாழ்ப்பாணத்தில் மாடொன்றை கொலை செய்து இறைச்சியாக்கி , அதன் கழிவுகளை இந்து ஆலயத்திற்கு அருகில் வீசி விட்டு சென்ற சம்பவம் பிரதேச மக்களை சினம் கொள்ள வைத்துள்ளது.

யாழ்ப்பாணம் – கொடிகாமம் , வரணி பகுதியில் உள்ள ஆலயமொன்றிற்கு அருகில் உள்ள வெறும் காணிக்குள் கட்டாக்காலி மாடொன்றினை இறைச்சியாக்கிய விஷமிகள் , அதன் கழிவுகளை அங்கேயே வீசிவிட்டு சென்றுள்ளனர்.

மாட்டு இறைச்சி கழிவுகள் 

இந்நிலையில் ஆலய வழிபாட்டிற்கு சென்றவர்கள் துர்நாற்றம் வீசுவதை அவதனித்து , அவ்விடத்திற்கு சென்று பார்வையிட்ட போதே , மாட்டு இறைச்சி கழிவுகள் காணப்பட்டுள்ளன.

ஆலயத்திற்கு அருகில் மாடொன்றினை இறைச்சியாக்கிய சம்பவம் ஆலய பக்தர்கள் இடையில் விசனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.