மீண்டும் சூறாவளி அபாய எச்சரிக்கை!

அடுத்த வாரம் உருவாகும் காற்று சுழற்சி காரணமாக 24 ஆம், 25ஆம் திகதிகளில் மீண்டும் ஒரு சூறாவளி Mauritius தீவு மற்றும் அதனை அண்டிய சில தீவுகளை தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பொங்கல் தினத்தன்று Belal என்னும் சூறாவளி Mauritius தீவுகளை தாக்கியிருந்த நிலையில் மீண்டும் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் நாட்களில் நாட்டில் பல பகுதிகளில் சீரான காலநிலையே தொடரும் என இலங்கை வளிமண்டவியல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.