போதை மாத்திரைகளுடன் மருந்தக உரிமையாளர் கைது!

  போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு அதிக விலையில் போதைமாத்திரைகளை விற்பனை செய்ததாக கூறப்படும் மருந்தகம் ஒன்றின் பெண் உரிமையாளர் ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கல்கிஸை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸை குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரிடமிருந்து 10 ஆயிரம் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.