யுவதியின் பழைய காதலனால் புதிய காதலனுக்கு நிகழந்த சம்பவம்!

   இளைஞன் ஒருவரின் பழைய காதலியுடன் மற்றுமொரு நபர், காதல் தொடர்பை கொண்டிருந்ததால் ஆத்திரமுற்ற பழைய காதலன் , புதிய காதலனை கத்தியால் குத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் கஹதுடுவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சம்பவத்தின் பின்னர் பழைய காதலன், அங்கிருந்து தப்பியோடியதாகவும் தெரிவித்தனர்.

தப்பியோடிய  பழைய காதலன்

கத்திக்குத்துக்கு இலக்காகி கடும் காயமடைந்த இளைஞன், வேதர மாவட்ட வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ள சந்தேகநபருடன் யுவதி காதல் தொடர்பை பேணிய நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் அதனை நிறுதிக்கொண்டார்.

அதன் பின்னர் , தற்போது கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞனுடன் காதல் தொடர்பை பேணியமை விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.