யாழ் கீரிமலை மகோற்சவ பெருவிழா ஆரம்பம்!

   ஈழத்திரு நாட்டின் புகழ்பெற்ற பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாகவும், வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவத்தலங்களில் ஒன்றாகவும் விளங்கும் யாழ்.கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவானது இன்று (24) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்தும் 15 நாட்கள் இடம்பெறவுள்ள மகோற்சவத்தில் பங்குனி மாதம் 07ம் திகதி சப்பைரத திருவிழாவும், மறுநாள் காலை இரதோற்சவம் இடம்பெறவுள்ளது.

அத்துடன், இரவு சிவராத்திரி விசேட பூசைகளுடன் ஆன்மீகம் சார் நிகழ்ச்சியும் இடம்பெற்று மறுநாளான 09 ம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் யாழ்.கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய திருவிழாவில் பெரும் தொகையான பக்தர்கள் கலந்துகொண்டனர்.