நாட்டில் உள்ள சுற்றுலா பயணிகள் தொடர்பில் ஜானதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கையில் தங்கியிருக்கும் ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமைச்சரவையின் அனுமதியின்றி அறிவித்தல் ஒன்று வெளியாகியிருந்தது.

குறித்த அறிவித்தல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட வீசா நீடிப்புகளை இரத்து செய்வதற்கு இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக தீர்மானிக்கவில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.