கிராம உத்தியோகத்தர்களுக்கான நேர்முகத் தேர்வு தொடர்பான அறிவிப்பு!

புதிய கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் (13.03.2024) ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு இடம்பெறவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

கடந்த (02.12.2023) ஆம் திகதி கிராம உத்தியோத்தர்களுக்கான பரீட்சையில் 4,232 பேர் நேர்முகத் தேர்வுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் – வனாத்தவில்லு பிரதேச செயலாளர் பிரிவில் கிராம உத்தியோகத்தர்களுக்கான பிரச்சினை தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலில் பங்கேற்றபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.