பிரித்தானியாவில் உயிரிழந்த இலங்கை மாணவன் தொடர்பில் மர்மம்!

பிரித்தானியாவில் வசித்த வந்த இலங்கை மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையை சேர்ந்த 16 வயதான டினால் டி அல்விஸ் என்ற பாடசாலை மாணவனின் மரணம் தொடர்பான தகவல்களே வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் க்ராய்டனில் உள்ள விட்கிஃப்ட் என்ற பாடசாலையில் கல்வி பயின்ற டினால் ஒரு சிறந்த மாணவராவார்.

பாடசாலையில் சிறந்த கால்பந்து மற்றும் ரக்பி வீரரான டினால், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து உயர்கல்வி படிக்க வேண்டும் என்று கனவு கண்டிருந்தார்.

இந்தக் கனவுகள் அனைத்தையும் தவிடு பொடியாக்கும் வகையில் 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி அவர் உயிரிந்தார்.

இந்தக் கனவுகள் அனைத்தையும் தவிடு பொடியாக்கும் வகையில் 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி அவர் உயிரிந்தார்.

குறித்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நபர் அல்லது இடம் தொடர்பில் இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை எனவும் அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

எனினும், VPN தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நைஜீரியாவில் இருந்து டினாலுக்கு இந்த செய்தி அனுப்பப்பட்டிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

சமூக ஊடகங்கள் மூலம் உரிய கப்பம் கோரிய நபர், அவருக்கு இரண்டு நிர்வாண புகைப்படங்களை அனுப்பியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னர் இவர் எடுத்த இரண்டு புகைப்படங்கள் சந்தேகநபர்களின் கைகளில் சிக்கியிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.