சமன் ரத்நாயக்கவிற்கு விளக்கமறியல்!

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாளிகாகந்த நீதிமன்றத்தில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க இன்று (02) ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் இறக்குமதி சம்பவம் தொடர்பில் சமன் ரத்நாயக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று அழைக்கப்பட்டிருந்தார்.

9 மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் நடத்திய விசாரணையின் பின்னர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவரை கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.