கொழும்பில் முற்றுகையிடப்பட்ட விபச்சார விடுதி!

கொழும்பு – மகரமகவில் ஆயுர்வேத உடற்பிடிப்பு நிலையம் என்ற பேர்வையில் இயங்கிவந்த இரண்டு பாலியல் தொழில் விடுதிகளை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது, இரண்டு முகாமையாளர்கள் மற்றும் 8 பெண்களை மகரமக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள், அம்பாறை, இங்கிரிய, இரத்தினபுரி, தமண, நிவித்திலக, நாவலப்பிட்டி ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என கண்டறிப்பட்டுள்ளது.