சுற்றுலா பயணிகளின் வருகையில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

இலங்கைக்கு கடந்த மாதத்தில் மாத்திரம் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த சபை வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள்

அந்த அறிக்கையில், கடந்த மாதத்தில் மாத்திரம் இரண்டு இலட்சத்து 18 ஆயிரத்து 350 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

ரஷ்யாவில் இருந்து 32,030 பேரும், இந்தியாவில் இருந்து 30,027 பேரும், சீனாவில் இருந்து 14,836 பேரும் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளனர்.

இதன்படி, குறித்த காலப்பகுதியில் ரஷ்யாவில் இருந்தே அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.