நாடாளுமன்றில் சாணக்யன் மீது தாக்குதல் முயற்சி!

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, தமிழ் எம்பியான  சாணக்கியனை அச்சுறுத்தியதோடு தாக்க முற்பட்ட்ட சம்பவம் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது.

 நாடாளுமன்றத்தில் பிரதமர் அலுவலகம் செல்லும் வழியில் நீர் எவ்வாறு எமது நாட்டின் பிரதமரை சந்திக்கலாம் என்று கூறி ரோஹித அபேகுணவர்தன  தாக்க முற்பட்டார்.

இவ்வாறான இனவாதிகள் நாட்டில் இருக்கும் வரை எவ்வாறு எமது மக்களுக்கான நீதி கிடைக்கும்? என சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே உயிருக்கு உத்தரவாதம் இவ் நாட்டில் இல்லை. தனது சிறப்புரிமை மீறியமைக்காக நாடாளுமன்றத்தில் சாணக்கியன் எம்.பி   வாக்குமூலம் பதிவு செய்துள்ளார் .