மோசமான செயலில் ஈடுபட்ட பௌத்த பிக்கு கைது!

சட்டவிரோதமான முறையில் வலம்புரி சங்கு கடத்தலில் ஈடுபட்ட பௌத்த தேரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தறையில் இருந்து மட்டக்களப்பிற்கு கடத்தி கொண்டு செல்லப்பட்ட ஒருகோடி ரூபா பெறுமதியான வலம்புரிசங்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கல்குடா பிரதேசத்தில் வைத்து நேற்றிரவு விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட அதிரடிப்படை

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.