யாழில் மாட்டைக் கொன்ற காவல்துறை உத்தியோகஸ்தர்!

சட்டவிரோதமான முறையில் மாட்டை இறைச்சியாக்கிய குற்றச்சாட்டில் முன்னாள் காவல் உத்தியோகஸ்தரை கைது செய்ய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வடமராட்சி புலோலி பகுதியில் வீடொன்றில் வைத்து சட்டவிரோதமான முறையில் மாடொன்று இறைச்சியாக்கப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டுக்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர்.

காவல்துறையினரை கண்டதும் மாட்டை இறைச்சியாக்கி கொண்டிருந்த நபர் வீட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இறைச்சி

இதையடுத்து இறைச்சியை மீட்ட காவல்துறையினர் வீட்டின் உரிமையாளரான தப்பியோடியவரின் தாயாரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரை விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் காவல்துறையினர் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

உத்தியோகஸ்தர்
அவரை வரும் செவ்வாய்க்கிழமை(19) வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை தப்பியோடிய நபர் முன்னாள் காவல்துறை உத்தியோகஸ்தர் எனவும் காவல்துறை உத்தியோகஸ்தராக கடமையாற்றிய காலப் பகுதியில் சிறுமி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவரென்பது குறிப்பிடத்தக்கது.