யாழில் அயல்வீட்டில் தண்ணீர் வாங்கிக் குடித்த பெண் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் அயல் வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு படலைக்கு வெளியே வந்த குடும்பப் பெண் ஒருவர் கீழே மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்றையதினம் (17-03-2024) மாலை வட்டுக்கோட்டை – தொல்புரம் கிழக்கு சுழிபுரம் சிவபூமியடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 49 வயதான இராசேந்திரம் செல்வநிதி ன்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பெண் அவரது அயல்வீட்டுக்காரருடன் பேசுவதில்லை. இந்த நிலையில் இன்று அவரது வீட்டிலிருந்து சுமார் 30 மீட்டர்கள் தூரத்தில் உள்ள அயல்வீட்டுக்கு சென்று தண்ணீர் தருமாறு கேட்டு வாங்கி குடித்துவிட்டு தனது வீட்டுக்கு செல்வதற்கு வெளியே வந்துள்ளார்.

பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு, கணவர் அவரை தாக்குவதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், தாயார் வழமையாக பாவிக்கும் மாத்திரைகளை விழுங்கிவிட்டு அயல்வீட்டுக்கு சென்றதாக அவரது மகள் தெரிவிக்கின்றார்.

இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்ற விபரங்கள் தெரியவராத நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலமானது உடற்கூற்று பரிசேதனைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.